Ashoka chakra
National Apprenticeship Training Scheme Instituted by BOATs/BOPT under MHRD
Ashoka chakra

தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம்

Ministry of Education, Government of India

தே.தொ.ப.ப.தி ஏன்?

நிறுவனங்கள் - தே.தொ.ப.ப.தி ஏன்?

தே.தொ.ப.ப.தி. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களிலிருந்து தேர்ச்சி பெறும் மாணவர்களைச் சிறந்த தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு பணியமர்த்த உதவுகிறது. மைய, மாநில மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களைப் பணியமர்த்துகின்றன. இத்திட்டத்தின் பயன்களைப் பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் தங்களைத் தே.தொ.ப.ப.தி. வலைத்தள நுழைவாயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொழிற்சாலைத் தொகுப்புகள் குறைவாக அமைந்துள்ள மாவட்டங்களில் / வட்டங்களில் உள்ள நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை உரிய இடங்களில் பணியமர்த்துவதில் இடர்களை எதிர்கொள்கின்றன. இத்திட்டமானது இந்நிறுவனங் களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் தற்போது கிடைப்பது போன்ற வசதிகளை இந்த நிறுவனத்தின் மாணவர்கள் தங்களுக்கான சிறந்த வேலைவாய்ப்பினைப் பெற்றிட உதவுகின்றன. தே.தொ.ப.ப.தி. தொழில் பழகுநர் பயிற்சி வாரியங்களோடும் / செய்முறைப் பயிற்சி வாரியங்களோடும் அலுவல் ரீதியான தொடர்பு கொண்டுள்ளதால் இவை தொழிற்சாலைகளின் நடப்புத் தேவை குறித்த எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதன் வாயிலாக, அந்நிறுவனங்கள் தங்கள் கலைத்திட்டம் மற்றும் பயிற்சி முறைகளை நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள உதவுகின்றன.

நிறுவனங்கள் அடைந்த பயன்களுள் சில

  • விண்ணப்பதாரர்கள் பற்றிய விவரங்களைப் பதிவேற்றம் செய்தல்
  • தொழிற்சாலைகளுடன் தொடர்பு கொண்டிருத்தல்
  • வேலைவாய்ப்பு உதவிக் குறிப்புகளை அளித்தல்

National Apprenticeship Training Scheme (NATS) portal provides a platform for various stakeholders like Students, Establishments and Institutions to leverage the Apprenticeship training programme.

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

Copyright © 2024 NATS. All Rights Reserved.